''அம்மாவ கவனிச்சுக்கோங்க'' - ஸ்ரீதேவியின் மகள் உருக்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பெரும்பாலான இந்திய மொழிகளில் புகழ்பெற்ற நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. அவர் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் துபாயில் மரணமடைந்தார். அவரது திடீர் மரணம் திரையுலகினர் மட்டுமல்லாமல் இந்திய மக்களை அதிர்ச்சியிலும் சோகத்திலும் ஆழ்த்தியது.

Janhvi Kapoor emotional post about her mother Sridevi on Mothers Day

இந்நிலையில் மே 12 அன்னையர் தினம் என்பதால் அவரது மகள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், அவர் சிறுவயதில் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்த அவர், அம்மாவை கவனியுங்கள், அம்மாவிற்கு உலகத்தின் உள்ள எல்லா அன்பையும் வழங்குங்கள் என்று தெரிவித்துள்ளார்.

ஜான்வி கபூர் கடந்த வருடம் வெளியான 'தடக்' மூலம் ஹிந்தி திரையுலகில் அறிமுகமாகியிருந்தார். இந்த படத்தை ஷாஷாங்க் கைதான் இயக்க, அஜய் அதுல் இசையமைத்திருந்தனர்.

Entertainment sub editor