Fakir Other Banner USA

“தோற்றத்தால் பலமுறை நிராகரிக்கப்பட்டேன்” - கண் கலங்கிய ஹீரோயின்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

இயக்குநர் ஹரீஷ் ராம் இயக்கியுள்ள இப்படத்தின் தர்ஷனுக்கு ஜோடியாக பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் நடித்துள்ளார். அனிருத், விவேக்-மெர்வின், சந்தோஷ் தயாநிதி ஆகியோர் இணைந்து இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

I Have Been Rejected Many Times, Thumbaa actress Keerthi Pandian cries in Press Meet

ரீகல் ரீல்ஸ் (ஓபிசி) பிரைவேட் லிமிடெட் மற்றும் ரோல் டைம் ஸ்டுடியோஸ் எல்எல்பி பேனரில் உருவாகியுள்ள இப்படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் வெளியிடுகிறது. அட்வெஞ்சர் படமாக உருவாகியுள்ள ‘தும்பா’ திரைப்படம் வரும் ஜூன்.21ம் தேதி ரிலீசாகிறது. இந்நிலையில், இப்படத்தின் ப்ரஸ் மீட் சமீபத்தில் நடைபெற்றது.

இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை கீர்த்தி பாண்டியன், கடந்த 3 ஆண்டுகளாக பல கதைகளை கேட்டு தான் மறுத்ததையும், தனது தோற்றத்தை குறை சொல்லி தன்னை சிலர் மறுத்தது பற்றியும் கீர்த்தி பாண்டியன் மேடையில் கண்ணீர் மல்க பகிர்ந்துக் கொண்டார். இறுதியில், பாரதியார் கவிதையான ‘தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?’ என்பதை கூறி ஒருவரை பார்வையினால் அளவிடாதீர்கள் என கூறினார்.

அவர் பேசுகையில், ‘தும்பா எனது அறிமுகப்படம். இது எனது முதல் படமாக அமைந்தது எனது வரம். என் வாழ்க்கையில் நான் எப்படி இருப்பேனோ அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் தான் இந்த படத்திலும் நடித்திருக்கிறேன். சிறந்த விதத்தில் VFX காட்சிகளை கொடுக்க, காட்டில் எங்களுடன் பயணித்து கடுமையாக உழைத்தார்கள் ரங்கா மற்றும் வில்லவன் கோதை சார். நடிகர்களான எங்களுக்கு முழு சுதந்திரத்தை கொடுத்தார் இயக்குனர் ஹரீஷ்.

‘என் தோற்றத்தை பற்றிய எந்த விதமான கருத்தும் சொல்லாமல், எனக்குள் தன்னம்பிக்கையை விதைத்தவர். 3 வருடங்களாக நான் நிறைய முயற்சிகள் எடுத்திருக்கிறேன், என் தன்னம்பிக்கையை குலைக்கும் விதமான கருத்துக்களை எதிர்கொண்டிருக்கிறேன். ஆனால் ஹரீஷ் அந்த விதத்தில் எனக்கு கிடைத்த வரம். உன் நடிப்பை மட்டும் கவனி, நம்பிக்கையோடு நடி என எனக்கு ஊக்கம் தந்தார் ஹரீஷ். குடும்பத்தோடு வந்து பார்க்கலாம், ஒரு தூய்மையான பொழுதுபோக்கு படமாக இருக்கும்’ என்றார் நடிகை கீர்த்தி பாண்டியன்.