கோவில் குறித்து ஜோதிகா ஏன் அப்படி பேசினார்.? - பின்னணியில் நடந்த சம்பவம் இதுதான்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகை ஜோதிகாவின் சமீபத்திய கோவில்கள் குறித்து பேச்சுக்கான காரணம் குறித்து இயக்குநர் இரா.சரவணன் பதிவிட்டுள்ளார். 

ஜோதிகாவின் பேச்சுக்கு இதுதான் காரணம் | director era saravanan open why jyothika spoke about thanjai periya kovil

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக கலக்கி வருபவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்ட இவர், தற்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் பொன்மகள் வந்தாள் ரிலீஸுக்காக காத்திருக்கிறது. மேலும் இரா.சரவணன் இயக்கத்தில் இவர் சசிகுமாருடன் ஒரு படத்தில் நடிக்கிறார். 

இதனிடையே ஒரு விருது வழங்கும் விழாவில், கோவில்களை சுத்தமாக பராமரிக்க செலவு செய்கிறோம், ஆனால் மருத்துவமனைகள் சரியாக பரமாரிக்கப்படாமல் இருக்கிறது. கோவில்களை விட மருத்துவமனைகளும் பள்ளிக்கூடங்களும் முக்கியம் என அவர் பேசினார். இதையடுத்து ஜோதிகா கோவில்களை பற்றி தவறாக பேசிவிட்டார் என அவரது பேச்சுக்கு ஒரு பக்கம் எதிர்ப்பும், அவர் சரியாகவே பேசியுள்ளார் என ஆதரவும் எழுந்தது. 

இந்நிலையில் ஜோதிகாவின் பேச்சுக்கு பின்னால் இருக்கும் சம்பவம் குறித்து ஜோதிகாவை வைத்து இயக்கியுள்ள இரா.சரவணன் பதிவிட்டிருக்கிறார். இதுகுறித்த அவரது பதிவில், 'ஜோதிகா அவரது படத்தில் நடிக்க தஞ்சாவூர் வந்துள்ளார். இதையடுத்து அங்கு மருத்துவமனையில் படப்பிடிப்பு நடந்த போது, அந்த மருத்துவமனை அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இருப்பதை கண்டிருக்கிறார். பெரிய கோவிலுக்கு எதிரில் இப்படி பராமரிப்பு இல்லாமல் ஒரு மருத்துவமனையை கண்ட காட்சியே அவரை அப்படி பேச வைத்திருக்கிறது. 

மேலும் அவர் தன் குழந்தைகளுக்கு தஞ்சை கோவிலின் நினைவு சின்னங்களை அன்பு பரிசாக வாங்கியுள்ளார். கிராமத்து மக்களுடன் கலந்து, எந்த கஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் நடித்தார். அவரது சமூக அக்கறை கொண்ட பேச்சுக்கு தேவையற்ற பின்னணிகளை கற்பிப்பது நியாமற்றது' என அவர் தெரிவித்துள்ளார். 

 

Entertainment sub editor