கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு மகன்கள் அளித்த பரிசு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தே.மு.தி.க வின் தலைவரும், நடிகருமான கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளுக்கு அவரின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் இணைந்து தந்தைக்கு பிறந்த நாள் பரிசாக பி.எம்.டபிள்யூ காரை வாங்கி கொடுத்துள்ளனர். கேப்டன் விஜயகாந்தின் உடல் நிலை அனைவரும் அறிந்ததே. இருப்பினும் அவர் பெற்ற பிள்ளைகள் தான் அவரது மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம்.

Caption Vijayakanths Sons Presented Bmw Car for his Birthday

தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் பிறந்த நாள் விழா, நேற்று அவருடைய கட்சித் தொண்டர்களாலும், ரசிகர்களாலும், கோலாகலமாக கொண்டாடப்பட்டது. மேலும் கட்சி சார்பாக பல்வேறு இடங்களில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன. எத்தனை எதிரிகள் அரசியலில் இருந்தாலும் தனது நற்பணிகளை தொடர்ந்து செய்து கொண்டுதான் இருக்கிறார். அது தான் கேப்டன் விஜயகாந்த்.

நேற்றைய தினம், கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க தலைமை அலுவலகத்தில் கட்சியின் சார்பாக, பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜயகாந்த் மற்றும் பிரேமலதா ஆகியோர் இணைந்து வழங்கினர். குறிப்பாக 68 மாவட்டங்களில் உள்ள ஆரம்ப சுகாதார மையங்களுக்கு 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கப்பட்டது. மேலும் தொண்டர்களுக்கு இனிப்பு கொடுத்து, அவர்களுடன் சில நிமிடங்கள் மனம் திறந்து உரையாடினார் கேப்டன் விஜயகாந்த்.

அவர் பேசியபோது ஒவ்வொருவர் மனதிலும் தோன்றிய ஒரே விஷயம், சீக்கிரம் அவர் குணமடைய வேண்டும் என்பது தான். அவருடைய பேச்சு பலருக்கு சந்தோசமாக இருந்தாலும் வார்த்தை தெளிவு சிக்கிரம் வர வேண்டும் என்பது தான் அனைவரின் ஆசையும் வேண்டுதலும். இந்நிலையில், தந்தைக்காக விஜயகாந்தின் மகன்கள், விஜய பிரபாகரன் மற்றும் சண்முக பாண்டியன் இருவரும் இணைந்து விலை உயர்ந்த கார்களில் ஒன்றான பி.எம்.டபிள்யூ காரை பரிசாக கொடுத்துள்ளனர். மகன்கள் ஆசையாக கொடுத்த பரிசை விஜயகாந்த் ஆனந்தக் கண்ணீர் மல்க பெற்று கொண்டு. இருவரையும் கட்டி பிடித்து தன்னுடைய அன்பை வெளிப்படுத்தினர்