www.garudabazaar.com

"விலகணும்னுதான் வெறுப்பா பேசுனேன்".. போட்டு உடைத்த நிரூப்.. பிரியங்காவிடம் மன்னிப்பு! BiggBoss

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவி பிக்பாஸ் வீட்டில், கமல்ஹாசன் முன்னிலையில் நிரூப் பிரியங்காவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

BiggBossTamil5: பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் போட்டியாளர்கள் அனைவரும் டாஸ்கின் போது சண்டை போட்டுக்கொண்டாலும் மற்ற நேரங்களில் நண்பர்களாகவே இருப்பதாக அனைவராலும் பேசப்பட்டு வந்தது. கமல்ஹாசன் கூட இந்த கருத்தை முன்மொழிந்தார். ஆனால் அதற்கு நிரூப்பும் பிரியங்காவும் விதிவிலக்குகள் என்று சொல்லலாம்.

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

ஒரு மன்னிப்பும் ஒரு நன்றியும்

எனினும் பல இடங்களில், தன் நெருங்கிய நண்பனான நிரூப், தன்னுடனான உறவுச்சிக்கலை சரி செய்ய முன்வரவில்லை என சொல்லி பிரியங்கா அழவும் செய்தார். இந்நிலையில் பிக்பாஸ் வீட்டுக்குள் ஒவ்வொரு போட்டியாளரும் ஒரு மன்னிப்பும் ஒரு நன்றியும் சொல்ல வேண்டுமானால், யார் யாருக்கு சொல்வீர்கள் என இந்த வார இறுதியில் கமல்ஹாசன் கேட்டிருந்தார்.

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

பிரியங்காவிடம் நிரூப் மன்னிப்பு!

அதில் பிரியங்காவை Hurt பண்ணியதற்காக தான் இந்த மன்னிப்பு கேட்பதாக குறிப்பிட்டு பேசிய நிரூப், இந்த மன்னிப்பை சாதாரணமாக அனைவரும் அனைவரிடத்திலும் கேட்பது போல கேட்டுவிடவில்லை. ஆம், அந்த நெட்டை மனிதர் நிரூப், பிரியங்கா அருகில் திடீரென சென்று தன் உயரத்தில் இருந்து இறங்கி, பிரியங்கா முன் மண்டியிட்டு பேசத் தொடங்கிவிட்டார். இந்த காட்சியை பார்த்ததுமே கமல் உட்பட பலரும் நெகிழ்ந்துவிட்டனர்.

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

விலகிப் போகணும்னு தான் வெறுப்பா பேசுனேன்!

அப்போது பிரியங்காவிடம் பேசிய நிரூப், “உன்ன மாதிரி ஃப்ரண்டு கிடைக்கும்போதுதான் இப்படி ஒரு ஷோவும் கிடைக்குது. இந்த கேம்க்காக விலகிப் போகணும்னு தான் உன்னை வெறுப்பது போல நிறைய பேசினேன். அதற்காக சாரி. ஒரு வாரத்துக்கு அப்புறம் திரும்ப நல்லந் நண்பர்களாக வாழ்க்கையில் இருக்கலாம்.!” என பேசினார்.

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

எனக்காக யாரும் நின்னது கிடையாது

இதேபோல் தான் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன் என்றால் அதுவும் பிரியங்காவுக்குதான் என்று சொன்ன நிரூப், “எனக்காக வாழ்க்கையிலும் சரி, இந்த வீட்லயும் சரி யாரும் நின்னது கிடையாது” என்று கூறினார். அப்போது பிரியங்கா அழத் தொடங்கினார். கமல்ஹாசனும் அதை ஆனந்த கண்ணீர் என்றும் இதுதான் நெகிழ்ச்சியான தருணம் என்றும் குறிப்பிட்டார்.

Also Read: "யாரும் கவலப் படாதீங்க!".. வெளியே வந்ததும் ஐக்கியுடன் சேர்ந்து தாமரை அக்காவின் முதல் Live வீடியோ!

தொடர்புடைய இணைப்புகள்

biggbosstamil5 niroop says sorry and thanks to priyanka

People looking for online information on BiggBoss5, BiggBossTamil5, Niroop, Priyanka, Vijay Television, Vijay tv will find this news story useful.