''அதுக்காக விஜய் என்னை கிண்டல் பண்ணாரு'' - சந்திரலேகா அனுபவம் பகிர்ந்த பிக் பாஸ் வனிதா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் சினிமாவில் தளபதி விஜய்யின் 'சந்திரேலகா' படம் மூலம் அறிமுகமானவர் வனிதா விஜயகுமார். பின்னர் தொடர்ந்து பல படங்களில் நடித்த அவர் தயாரிப்பாளராகவும் பரவலாக அறியப்படுகிறார்.

Bigg Boss Vanitha Speaks about Thalapathy Vijay and Chandralekha

பின்னர் அவர் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், அங்கே அவரது நடவடிக்கைகளால் அதிக அளவில் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தற்போது Behindwoods TVயில் விஜே நிக்கி தொகுத்து வழங்கும் kiss me, Hug Me, Slap Me நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது விஜய்யுடன் நடித்த அனுபவங்களை பகிர்ந்து கொண்ட அவர், ''சந்திரலேகா முதல் நாள் படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வந்து துவக்கி வைத்தார்.

முதல் நாள் படிப்பிடிப்பு முடிந்ததும் என் அம்மாவுடன் என் அறையில் இருந்தேன். அப்போது நான் மேக்க அப் இல்லாமல் இருந்தேன். அங்கே வந்த விஜய்  என்னை பார்த்து உன் அக்கா எங்கே என்று கேட்டார். நான் அவர் ஊரில் இருக்கிறார் என்றேன். அதுக்குள்ள ஊருக்கு போய்ட்டாங்களா என்றார். அப்போது தான் விஷயம் புரிந்தது. என்னை தான் மேக் அப் இல்லாமல் இருந்ததை பார்த்து அப்படி நினைத்திருக்கிறார்.

பின்னர் உண்மையை சொன்னதும் 'என்ன கிளாஸ் படிக்குற?' என்று கேட்டார். அதற்கு நான் 8 ஆம் வகுப்பு படிக்கிறேன் என்று சொன்னேன்.  அடப்பாவிகளா 8 ஆம் கிளாஸ் படிக்குற பொண்ண ஷூட்டிங் கூட்டு வந்துட்டாங்க'' என்றார்.

''அதுக்காக விஜய் என்னை கிண்டல் பண்ணாரு'' - சந்திரலேகா அனுபவம் பகிர்ந்த பிக் பாஸ் வனிதா வீடியோ