"நியாயமே இல்லாத மரணம்" - சுர்ஜித்தின்‌ மரணம் குறித்து கவின்‌ ஆதங்கம்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஆழ்துளை கிணற்றில் விழுந்து உயிரிழந்த சிறுவன் சுர்ஜித்தின் மரணம் குறித்து நடிகர் கவின் தனது ஆதங்கத்தினை தெரிவித்துள்ளார்.

Bigg Boss Kavin on loss of Surjith who trapped in a borewell

திருச்சி, மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளைக் கிணற்றில் கடந்த அக்.25ம் தேதி மாலை 5:40 மணியளவில் 2 வயது சிறுவன் சுர்ஜித் வில்சன் தவறி விழுந்தார். சிறுவனை மீட்கும் பணி கடந்த 4 நாட்களாக தீவிரமாக முயற்சிக்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்துவிட்டதாக நேற்று இரவு அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆழ்துளைக் கிணற்றில் இருந்து அழுகிய நிலையில், மீட்கப்பட்ட குழந்தையின் உடல் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, பின்னர் அவரது பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சிறுவனை மீட்கும் தொடர் போராட்டம் தோல்வியடைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அமைச்சர்கள், அதிகாரிகள், திரை பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் சிறுவன் சுர்ஜித்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், நடிகர் கவின் தனது ஆதங்கத்தினையும், வருத்ததையும் தெரிவித்துள்ளார். அவரது இன்ஸ்டாகிராம் பதிவில், ‘நியாயமே இல்லாத மரணம்’ என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Kavin M (@kavin.0431) on