ET Others
www.garudabazaar.com

"நீ யாரு இத எல்லாம் பண்ண??.." கொதித்த பாரதி.. சைலண்டான கண்ணம்மா.. "எப்போங்க உண்மைய சொல்ல போறீங்க??"

முகப்பு > சினிமா செய்திகள்

By |

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'பாரதி கண்ணம்மா' சீரியல், தொடர்ந்து ரசிகர்களின் ஆதரவை பெற்று வருகிறது.

barathi kannamma latest update about kannamma and venba in school

இந்த தொடரின் முக்கிய கதாபாத்திரங்களான பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோர், தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

இன்னொரு பக்கம், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்ட வெண்பா, பல சூழ்ச்சிகள் செய்து சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.

விறுவிறுப்பு

வெண்பாவின் தீய திட்டங்களில் சிக்காமல், கண்ணம்மா ஒரு பக்கம் பதிலடி கொடுத்து கொண்டே இருக்க, தொடரில் பரபரப்புக்கும், விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. முன்னதாக சந்தேகத்தின் பெயரில் கண்ணம்மாவை பிரிந்த பாரதி, கண்ணம்மாவின் குழந்தைக்கு தான் அப்பா இல்லை என்று தொடர்ந்து கூறி வருகிறார்.

அது மட்டுமில்லாமல், இரண்டு முறை வெண்பாவை திருமணம் செய்யவும் பாரதி முயற்சிகள் மேற்கொண்டுள்ளார். தன்னுடனான திருமணத்திற்கு எப்போது தயாராவார் என எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார் வெண்பா.

கோபத்தில் பாரதி

மேலும், பாரதியிடம் தத்துப் பிள்ளையாக வளரும் ஹேமா, பாரதி மற்றும் கண்ணம்மா ஆகியோருக்கு பிறந்த குழந்தை என்பது ஊருக்கே தெரியும். ஆனால், இந்த விஷயம் பாரதிக்கு தெரியாது. இது பற்றி, கண்ணம்மா பலமுறை பேச முயற்சி செய்த போதும், அது என் குழந்தை இல்லை என உண்மையை மறுத்து, கோபத்திலேயே இருக்கிறார் பாரதி.

அண்ணன் - தங்கை

இப்படி இருக்க, ஒரு முறை பள்ளிக்கூட காட்சியில் பாரதி மற்றும் வெண்பா ஆகியோரை அண்ணன் - தங்கை என சொல்லியிருப்பார் கண்ணம்மா. பாரதியை திருமணம் செய்ய துடிக்கும் வெண்பா, இதைக் கேட்டதும் முகமே சிவந்தே போனது. இதனிடையே, லேட்டஸ்ட் எபிசோடில், பள்ளிக்கூட காட்சி ஒன்றில், ஹேமாவுக்கு பிரியாணி கொடுக்க கண்ணம்மா முற்பட, ஹேமாவோ அவரை விட்டு விட்டு, வெண்பாவிடம் சென்று சாப்பிடுகிறார்.

அறைந்த கண்ணம்மா

இதனைத் தொடர்ந்து, மீண்டும் கண்ணம்மாவுக்கு முன்பாகவே வெண்பா வர, அவரை எச்சரிக்கிறார் கண்ணம்மா. இரண்டு பேரும் மாறி மாறி பேசிக் கொண்டிருக்க, கடைசியில் கோபத்தில் வெண்பாவின் கன்னத்தில், கண்ணம்மா அறைந்து விடுகிறார். சரியாக, அந்த நேரம் பார்த்து, பாரதி காரில் இருந்து இறங்கி வர, வெண்பாவை அறைந்ததற்காக, வழக்கம் போல வந்து கண்ணம்மாவை திட்டுகிறார்.

பாரதியின் கேள்விகள்

"ஹேமா மீது உனக்கென்ன பாசம்?. அவள் மீது அக்கறை காட்ட நீ யார்?" என கேள்விகளை பாரதி அடுக்க, கண்ணம்மாவோ அமைதியாக நிற்கிறார். தொடர்ந்து, வென்பாவை அழைத்துக் கொண்டு பாரதி அங்கிருந்து கிளம்பி விடுகிறார்.

தற்போது வெண்பாவுக்கு சாதகமான காட்சிகள் இருந்தாலும், இனிவரும் எபிசோடுகளில், கண்ணம்மாவுக்கு சாதகமான காட்சிகள் வரும் என்ற நம்பிக்கையில் ரசிகர்கள் உள்ளனர். 

அதே போல ஹேமா யாருடைய குழந்தை என்பது பற்றியும் விரைவில் பாரதிக்கு தெரிய வர வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய இணைப்புகள்

barathi kannamma latest update about kannamma and venba in school

People looking for online information on Barathi Kannamma, Latest Episode, Trending, Venba, Vijay tv serial will find this news story useful.