"எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சி பற்றி சாயிஷா கூறியது…! மனம்திறந்த ஆர்யா

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் ஆர்யா நடிப்பில் வரும் செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ள படம் 'மகாமுனி' இப்படத்தை 'மௌனகுரு' இயக்குனர் சாந்தகுமார் இயக்கியுள்ள இப்படத்தில் இந்துஜா, மஹிமா, நம்பியார், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். இப்படத்தினை ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார் இப்படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார்.

Arya Reveals! First Interview After Marriage Sayyeshaa

இன்னிலையில் Behindwoods தளத்திற்கு ஆரிய அளித்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரசிய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் மகாமுனி மட்டும் காப்பான் படத்தில் நடித்தபோது தான்  மறக்கமுடியா நினைவுகளும் அனுபவம் கிடைத்ததாக கூறியுள்ளார்.

மகாமுனி படம் பற்றி பேசும் பொழுது இப்படம் மகா மற்றும் மொழி என இரு கதாபாத்திரங்களை சுற்றியே நகரும் என்றும் இப்படத்தில் மகா கதாபாத்திரம் குற்ற சம்பவங்களுக்கு உதவும் கதாபாத்திரம் ஆகும் கதாபாத்திரத்திற்கு ஒரு குழந்தை மற்றும் மனைவி இருக்கும் எனவும் முனி கதாபாத்திரம் இதற்கு எதிராக இருக்கும் என்றும் கூறினார்.

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியை பற்றி கேட்டபொழுது  அது என்னுடைய தனிப்பட்ட ஆர்வத்தில் தான் கலந்து கொண்டேன் என் மனைவி சாயிசா இதை பற்றி ஒருபோதும் என்னிடம் கேட்டதில்லை என்றார்.

காப்பன் படம் பற்றி கேட்ட பொழுது மோகன்லால் சூர்யா இப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் நிறைய அனுபவங்களை படத்தின் மூலம் நான் கற்றுக் கொண்டேன் என்றும் என்னுடைய கதாபாத்திரம் ஜாலியான கதாபாத்திரம் என்றும் சூர்யா மற்றும் மோகன்லால் கதாபாத்திரம் தான் இப்படத்திற்கு பலம் சேர்க்கும் என்றார் ஆர்யா.

"எங்க வீட்டு மாப்பிள்ளை" நிகழ்ச்சி பற்றி சாயிஷா கூறியது…! மனம்திறந்த ஆர்யா வீடியோ