கார்த்திக் நரேன் - அருண் விஜய் இணையும் 'மாஃபியா' படத்தின் மாஸ் அப்டேட்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

'துருவங்கள் பதினாறு' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கார்த்திக் நரேன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து அரவிந்த் சுவாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா உள்ளிட்டோர் நடிப்பில் நரகாசூரன் படத்தை இயக்கினார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது.

Arun Vijay and Karthik Naren's Mafia shoot starts July 6

இதனையடுத்து கார்த்திக் நரேன் இயக்கும் படம் 'மாஃபியா'. இந்த படத்தில் அருண் விஜய், பிரசன்னா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கவிருக்கின்றனர். இந்த படத்தை லைக்கா நிறுவனம் சார்பாக சுபாஷ்கரன் தயாரிக்கவிருக்கிறார்.

எங்களுக்கு கிடைத்த தகவலின் படி இந்த படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் முடிவடைந்து இதன் முதற்கட்ட படப்பிடிப்பு ஜூலை 6 முதல் துவங்கவிருப்பதாக கூறப்படுகிறது.