www.garudabazaar.com

SPB-யின் திடீர் மறைவால் கலங்கி போன நயன்தாரா.. உருக்கமான இரங்கல்.

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பாடகர் எஸ்.பி.பியின் மறைவுக்கு, நடிகை நயன்தாரா உருக்கமான இரங்கலை தெரிவித்துள்ளார். 

எஸ்.பி.பிக்கு நயன்தாரா இரங்கல் | Actress nayanthara condolences for late singer sp balasubrahmanyam

தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல்வேறு மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இவருக்கு அண்மையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கொரோனாவையும் வென்று, 50 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த அவர்,  நேற்று பிற்பகல் ஒரு மணியளவில் காலமானார்.

எஸ்.பி.பிக்கு நயன்தாரா இரங்கல் | Actress nayanthara condolences for late singer sp balasubrahmanyam

இந்நிலையில் தற்போது நடிகை நயன்தாரா எஸ்.பி.பிக்காக உருக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, ''தெய்வீகக் குரல் இனி இல்லை என்பதை நினைக்கும் போதே நெஞ்சம் பதறுகிறது. தலைமுறைகளை தாண்டி நம்மை மகிழ்வித்த திரு எஸ்.பி.பாலசுப்ரமணியம் சாருடைய குரல், நம்முடைய எல்லா காலங்களுக்கும், காரணங்களுக்கும் பொருந்தி இருக்கும்.

நீங்கள் இனி இல்லை என்பதை மனம் நம்ப மறுக்கிறது. ஆயினும் உங்கள் குரல் என்றென்றும் நீங்கா புகழுடன் இருக்கும். உங்களுக்கு அஞ்சலி செலுத்தி, எங்களுக்கு நாங்களே ஆறுதல் சொல்லிக் கொள்ளும் இந்த நேரத்தில் கூட உங்கள் பாடல் மட்டுமே பொருந்துகிறது. எங்கள் வாழ்வில் உங்களின் ஆளுமை அப்படி. நீண்ட காலமாக இடைவிடாமல் உழைத்து எங்களை மகிழ்வித்த உங்களுக்கு மனம் இல்லாமல் பிரியா விடை கொடுக்கிறோம். பாடும் நிலா விண்ணிலிருந்து பாடட்டும். உங்களை பிரிந்து வாடும் உங்கள் குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் உங்கள் திரை உலக சகாக்களுக்கும், உலகெங்கும் பரவி இருக்கும் உங்கள் எண்ணற்ற ரசிகர்களுக்கும் என் மனமார்ந்த ஆறுதல் செய்தி இது.''

 

SPB-யின் திடீர் மறைவால் கலங்கி போன நயன்தாரா.. உருக்கமான இரங்கல். வீடியோ

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய இணைப்புகள்

எஸ்.பி.பிக்கு நயன்தாரா இரங்கல் | Actress nayanthara condolences for late singer sp balasubrahmanyam

People looking for online information on Nayanthara, SP Balasubrahmanyam, SPB will find this news story useful.