கராத்தேயில் பிளாக் பெல்ட் வாங்கிய சிங்கக்குட்டி

முகப்பு > சினிமா செய்திகள்

By |

தமிழ் திரையுலகின் நட்சத்திர தம்பதியான சூர்யா-ஜோதிகாவின் மகன் தேவ் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

Actor Suriya-Jyothika's son Dev won black belt in National Level Karate Championship

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் சூர்யா மற்றும் ஜோதிகாவிற்கு தியா, தேவ் என இரு குழந்தைகள் உள்ளனர். பெற்றொர்கள் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களாக ஜொலித்தாலும், தியா மற்றும் தேவ் படிப்பிலும், விளையாட்டிலும் கவனம் செலுத்து வருகின்றனர்.

சூர்யாவின் மகள் தியா, கால் பந்து, டென்னிஸ், கிரிக்கெட் போன்ற விளையாட்டுகளில் ஆர்வம் காட்டி வரும் நிலையில், மகன் தேவ் தற்காப்பு கலையான கராத்தேவில் ஆர்வம் காட்டி வருகிறார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான ஷென் இஷ்ரின்யூ கராத்தே போட்டியில் பங்கேற்ற சூர்யாவின் மகன் தேவ், தண்டர்கேக் பிரிவில் கலந்துக் கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டிக்கு தமிழகத்தில் இருந்து 40 பேர் கலந்துக் கொண்டு தற்காப்பு கலைகளை செய்து அசத்தியுள்ளனர். இந்த போட்டியை காண நடிகர் சூர்யா, ஜோதிகா மற்றும் அவரது மகள் தியா ஆகியோர் நேரில் சென்று போட்டியாளர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

சினிமாவில் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளில் பெரும்பாலும் டூப் போடாமல் ரிஸ்க் எடுத்து நடிப்பவர் சூர்யா. கர்ஜிக்கும் சிங்கமாக ரசிகர்கள் மனதை கவர்ந்த சூர்யாவின் மகன் தற்போது சிங்கக்குட்டி போல் கராத்தேவில் பிளாக் பெல்ட் வாங்கியிருப்பதை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.