www.garudabazaar.com

OFFICIAL - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு அமிதாப் கொடுத்த முதல் Statement.!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக பதிவிட்டுள்ளார். 

மருத்துவமனையில் இருந்து அமிதாப் வெளியிட்ட பதிவு | actor amitabh bachchan first statement after hospitalized for coronavirus positive

பாலிவுட் சினிமாவில் மூத்த நடிகராக வலம் வருபவர் அமிதாப் பச்சன். இவருக்கு கடந்த சனிக்கிழமை கொரோனா வைரஸ் பாசிட்டீவ் என்று வந்த தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஷ்வர்யா ராய், அவர்களது மகள் ஆராதயா ஆகியோருக்கும் கொரோனா வைரஸ் பாசிட்டீவ் வந்தது. 

இதையடுத்து அமிதாப் மற்றும் அபிஷேக் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐஷ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராதயா ஆகியோர் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 

இந்நிலையில் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிறகு முதல்முறையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்த தனது பதிவில்,''எனக்கும், அபிஷேக், ஐஷ்வர்யா, ஆராதயா உள்ளிட்டோருக்கு நீங்கள் கொடுத்த வேண்டுதல்களுக்கும் பிரார்த்தனைகளுக்கும், எனது முடிவில்ல அன்பை தெரிவித்து கொள்கிறேன். உங்களுக்கு எனது இருகரத்தையும் கூப்பி நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்'' என தெரிவித்துள்ளார். இதையடுத்து ரசிகர்கள் விரைவில் அமிதாப் குடும்பத்தினர் குணமாகி வர வேண்டும் என பதிவிட்டு வருகின்றனர். 

 

தொடர்புடைய இணைப்புகள்

மருத்துவமனையில் இருந்து அமிதாப் வெளியிட்ட பதிவு | actor amitabh bachchan first statement after hospitalized for coronavirus positive

People looking for online information on Abhishek Bachchan, Aishwarya Rai Bachchan, Amitabh Bachchan, Coronavirus will find this news story useful.