இதற்காக ஹிப்ஹாப் தமிழாவுக்கு சுந்தர்.சி போட்ட கண்டிஷன்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

மீசைய முறுக்கு படத்தைத் தொடர்ந்து ஹிப் ஹாப் ஆதி நடித்திருக்கும் படம் நட்பே துணை. இந்த படத்தை அவ்னி கிரியேஷன்ஸ் சார்பில் சுந்தர்.சி தயாரிக்கிறார்.

Sundar.C seeks hit songs for HipHop tamizha's Natpe Thunai

ஹிப்ஹாப் தமிழாவின் இசையில் இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஷா ரா, ஆர்ஜே விக்னேஷ் உள்ளிட்ட யூடியூப் பிரபலங்களுடன் பாண்டியராஜன், இயக்குநர் கரு.பழனியப்பன், கௌசல்யா ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றது. அப்போது பேசிய ஹிப்ஹாப் தமிழா,

'அதிக வாய் பேசிய என்னை 'ஆம்பள'யில் அறிமுகப்படுத்தி, 'மீசைய முறுக்கு'-ல் என் கனவை நனவாக்கி 'நட்பே துணை'யில் இப்படியொரு வாய்ப்பை கொடுத்த சுந்தர்.சி அண்ணாவுக்கு நன்றி.

மது, புகை இல்லாமல் இப்படம் இருக்க வேண்டும் என்று இயக்குநரிடம் கேட்டுக்கொண்டேன். அவரும் அதை ஏற்றுக் கொண்டு படமெடுத்தார். குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் சென்று பார்க்ககூடிய படமாக இருக்கும்.

பின்னர் பேசிய இயக்குநர் சுந்தர்.சி, கதையைக் கேட்கும்போதே மிகவும் பிடித்திருந்தது. என் இயக்கத்தில் கருத்து சொல்லக்கூடிய படத்தைக் கொடுக்க முடியவில்லை. அதை ஆதி செய்ததால் இப்படத்தை தயாரிக்க முடிவு செய்தேன். ஆனால், பாடல்கள் மட்டும் நன்றாக வரவேண்டும் என்று ஒரு நிபந்தனை மட்டும் வைத்தேன். அதேபோல் மூன்று பாடல்களும் இணையத்தில் வெளியாகி வெற்றி பெற்றிருக்கிறது.

மேலும், இயக்குநர் பார்த்திபன் தேசிங்குவிடம் பிடித்த விஷயம் என்னவென்றால், இதுவரை பாண்டிச்சேரியை பற்றிய படம் வந்ததில்லை. அவர் கதை கூறும்போதே பாண்டிச்சேரியைப் பற்றிக் கூறியது பிடித்திருந்தது. ஆகையால் செலவைப் பற்றி கவலைப்படாமல் படம் தரமானதாக இருந்தால் போதும் என்று அவர்களிடமே விட்டுவிட்டேன் என்றார்.