பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்?-சத்யராஜ்

முகப்பு > சினிமா செய்திகள்

By |

பொள்ளாச்சியில் பல பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து, வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலுக்கு உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

Pollachi Rape Case: Sathyaraj requests to give death sentence to all the rape accused

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவியிடம் ஃபேஸ்புக் மூலம் பழகி, தனிமையில் வரவழைத்து அவரை பாலியல் பலாத்காரம் செய்து, ஆபாசமாக வீடியோ எடுத்து மிரட்டிய கொடூர கும்பலை போலீசார் தனிப்படை அமைத்து கைது செய்தனர். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்படும் பொள்ளாச்சியைச் சேர்ந்த சபரி ராஜன், சதீஷ், வசந்த குமார் மற்றும் முக்கிய குற்றவாளி திருநாவுக்கரசு ஆகியோர் மீது குண்டர் சட்டம் பதியப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில், சமீபத்தில் பாதிக்கப்பட்ட பெண்களில் ஒருவர் அந்த காமக் கொடூரர்களிடம் கெஞ்சும் வீடியோ வெளியாகி மனதை பதபதைக்கச் செய்தது. இச்சம்பவத்திற்கு ஏராளமானோர் கடும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில், நடிகர் சத்யராஜ் கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசி வெளியிட்டுள வீடியோவில், அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம், இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வதென்று தெரியவில்லை. அவர்களுக்கு சட்டப்படிஉச்சபட்ச தண்டனையை தாமதமின்றி வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

மேலும், மனநலம் சம்மந்தப்பட்ட பாடத்திட்டம் பள்ளியில் இருந்தே இருக்க வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நம்பவில்லை. இது போன்ற கொடூரமான மனம் படைத்தவர்களை கடுமையாக தண்டிக்கத்தான் வேண்டும் மன்னிக்க முடியாது. உடனடியாக சட்டத்திற்கு உட்பட்டு இவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் சம்பவம்: மனித மிருகங்களுக்கு என்ன தண்டனை கொடுக்கணும்?-சத்யராஜ் வீடியோ